Saturday, September 13, 2025

கிடைத்த வாய்ப்பில் கோல் அடித்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நரியம்பாளையத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது விழாவில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய பேருந்துநிலையம் அமைக்க நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பட்டுக்கோட்டையில் மார்க்கெட் மற்றும் சீர்மிகு பள்ளி திட்டங்களை சுட்டிக் காட்டிய அவர், பாதாள சாக்கடை திட்டத்தையும் பட்டுக்கோட்டை நகரில் செயல்படுத்தி கொசுத்தொல்லை இல்லாத நகராக பட்டுக்கோட்டையை மாற்ற கோரிக்கைவிடுத்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையை அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img