Tuesday, December 2, 2025

அதிரையில் தாம்பரம் – செங்கோட்டை ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

முன்னாள் மத்திய அமைச்சரும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர், தான் படித்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மரியாதை நிமித்தமாக கடந்த 28/08/2023 திங்கட்கிழமை அன்று வருகை புரிந்தார்.

அதிராம்பட்டினம் வருகை புரிந்த அவரிடம், தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அதிரை நகர காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது அதிரை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் K. தமிம் அன்சாரி, பட்டுக்கோட்டை வடக்கு வட்டார தலைவர் கோ.வி. செந்தில், நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் N. முகமது மாலிக், நகர கமிட்டி நிர்வாகிகள் திலகராஜ் கட்டபொம்மன், அலி அக்பர், தமிம் அன்சாரி, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் சார், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், மீடியா மேஜிக் நிஜாம் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பின்போது உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img