Monday, December 1, 2025

சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தமிழர் தேர்வு!!

spot_imgspot_imgspot_imgspot_img

சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆசிய கண்டத்தின் நிதி தலைநகராக சிங்கப்பூர் இருப்பதால், உலக நாடுகள் மத்தியில் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த தேர்தலில், இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் தொடர்ந்து முன்னிலை வகித்த வந்த நிலையில் தற்போது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டான் கின் லியான் 13.88% வாக்குகளும், இங் கொக் சொங் 15.72% வாக்குகளும் பெற்று படுதோல்வி அடைந்தனர்.

சிங்கப்பூர் நாட்டின் அதிபராகப் பதவியேற்க உள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img