Monday, December 1, 2025

Big breaking: ஒருதலைபட்சமாக செயல்படும் பட்டுக்கோட்டை RDO! முதலமைச்சர் தனிபிரிவில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் புகார்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகே உள்ள முஸ்லீம் சிறுபான்மை கல்வி நிருவனமான இமாம் ஷாஃபி பள்ளியை திமுக நகர செயலாளரும் நகர்மன்ற துணை தலைவருமான இராம.குணசேகரனின் தூண்டுதலின் பேரில் நகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக விடியற்காலையில் சீல் வைத்தது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பூட்டிய பள்ளியை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கேயே பொதுமக்கள் 5 நாட்களாக தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அமைதி பேச்சுவார்த்தை என்கிற பெயரில் தமக்கு ஆதரவானவர்களை மட்டும் அழைத்து தனியார் மண்டபத்தில் ஒரு கூட்டத்தை பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அக்பர் அலி நடத்தி இருக்கிறார்.

இதுகுறித்த தகவல் அறிந்த அதிரையின் 60% இஸ்லாமியர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஜமாத்தான சம்சுல் இஸ்லாம் சங்கம், உடனடியாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில் ஆர்.டி.ஓ நடத்திய அமைதிபேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கவில்லை என்றும், அதனால் அதில் தங்களது சங்கம் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் மக்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஒருதலைபட்சமாக செயல்படும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அக்பர் அலி குறித்து முதலமைச்சர் தனிபிரிவில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அக்பர் அலி குறித்து பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றுக்கொண்டிருக்கும் சூழலில் தற்போது ஒரு மிகபெரிய ஜமாத் நிர்வாகமே முதலமைச்சருக்கு புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img