Thursday, May 16, 2024

CAA சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து  ஆர்ப்பாட்டம்..! அதிரையர்கள் பங்கேற்க அழைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

2019 ஆண்டு நாடாளுமன்ற அவைகளில்  உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்திய போது இந்தியா முழுவதும் தொடர் சாஹீன்பாக் பாணியிலான போராட்டங்கள் வெடித்தன.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக போராட்டங்களை முடித்து கொண்டனர். பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அழுத்தங்களால் கிடப்பில் போடப்பட்ட சட்டமான சிஏஏவை தூசிதட்டி நேற்று மாலை அதிரடியாக நாடு முழுமைக்கும்  அமல்படுத்தியது ஒன்றிய அரசு.

இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ஒரு நாட்டின் குடியுரிமை தொடர்பான முடிவை மாநில அரசாங்கங்கள் எடுக்க இயலாது என்ற போக்கில் செயல்பட்டுள்ள ஒன்றிய அரசின் கொடுங்கோல் தன்மையை முறியடிக்கும் விதமாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக மனித நேய ஜனநாயக கட்சியின் அதிராம்பட்டினம் கிளை இன்று 12.03.2024 மாலை 7மணியளவில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து போராட்டத்தை துவக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் அதன் பொறுப்பாளர்கள்  இந்த போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...