Saturday, September 13, 2025

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை.

இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி ஒருவர் கூறுகிறார்.

கடந்த காலங்களில் மழைநீர் அருகாமையில் உள்ள திடலை கடந்து வாய்க்காலில் சென்றடையும், ஆனால் தற்பொழுது அருகாமையில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகம் திடலை மேம்பாடு செய்திருக்கிறது.

இதனால் அவ்வப்போது பெய்யும் மழை நீர் ஓடவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் தஞ்சமடைகிறது.

நள்ளிரவு பெய்த கடும் மழையினால் தமது வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளதால் படுக்கக்கூட இடமின்றி தவிப்பதாக தீனுன் நிசா என்ற சகோதரி தெரிவிக்கிறார்.

மேலும் கவுன்சிலர் மன்சூரின் கவனத்திற்கு பலர் இந்த விவகாரத்தை எடுத்து சென்றும் பலனில்லை என்பதால்.

நகர்மன்ற தலைவரின் கவனத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்.

ஆனால் இதுவரையில் எந்த அதிகாரியும் எங்களை சந்திக்கவில்லை என்றும் அவர்களை சந்திக்க இப்பகுதி மக்களை ஒன்று திரட்டி நகராட்சியை முற்றுக்கையிட செல்ல உள்ளதாக தீனுன் நிசா தெரிவிக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img