Monday, December 1, 2025

தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்திய புதுச்சேரி அரசு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அரசுப் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வினால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எதிர்க்கட்சிகளும் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், தமிழக அரசு உயர்த்திய டிக்கெட் கட்டணத்திற்கு இணையாக கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்து, தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஈ.சி.ஆர். வழியாக வரும் பேருந்து கட்டணம் 100 ரூபாயில் இருந்து 145 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பைபாஸ் வழியாக வரும் பேருந்துகளில் 140 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பேருந்து கட்டணம் 200 ரூபாயில் இருந்து 315 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுவை-காரைக்கால் டிக்கெட் கட்டணம் 80 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும், புதுவை-பெங்களூர் டிக்கெட் கட்டணம் 215 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும், புதுவை-திருப்பதி கட்டணம் 170 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img