Friday, March 20, 2026

தமுமுக ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் ! நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சாலை துவரங்குறிச்சியில் நேற்று (02/05/18) புதன்கிழமை பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது சில விரோதிகள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் பலத்த காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று (03/05/18) வியாழக்கிழமை தமுமுக சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக, மமக தலைவர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் 20க்கு மேற்பட்ட நிர்வாகிகள் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓட்டுநர் ராஜா முஹம்மது அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு பட்டுக்கோட்டை காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளரை சந்தித்து தாக்கியவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தினர். உதவி ஆய்வாளரும் குற்றவாளிகள் மீது இரண்டு நாட்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமுமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img