Sunday, March 22, 2026

ரயில் நிலையங்களில் இனி ‘செல்ஃபி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

“ரயில் நிலையங்களில் இனி ‘செல்ஃபி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சட்டமானது இன்று (22.06.2018) வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்ஃபி’ பழக்கம் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது. இத்தகைய ‘செல்ஃபி’ கலாச்சாரத்திற்கு இளைஞர்கள் மட்டும் தான் அடிமை என்று ஆணித்தரமாக சொல்லிவிட முடியாது. ஏனெனில் பள்ளி குழந்தைகள் முதல் பள்ளு போன தாத்தாக்கள் வரை பலர் இந்த ‘செல்ஃபி’ மோகத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
நண்பர்களுடன், உறவினர்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பது என்பதை தாண்டி, விலங்குகள் பக்கத்திலும், கடல் நடுவிலும், ரயில் தண்டவாளங்களில், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்ஃபி’ எடுக்கின்றனர். இதில் குறிப்பாக ரயில்களில் போட்டோ எடுக்கும் போது பல உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்ஃபி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனை தடுக்க ரெயில்வே வாரியம், ரயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, பிளாட்பாரங்கள், ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்ஃபி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்ஃபி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img