Sunday, February 1, 2026

சுகாதாரத்தை பேண முன்வருமா அதிரை எவர் கோல்டு நிறுவனம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் எவர் கோல்டு காம்ப்ளக்சில்(EVER GOLD COMLEX) 100க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களாக எவர் கோல்டு காம்ப்ளெக்ஸ் பின்புறம் வாகனம் நிறுத்தும் இடத்தில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்கின்றது.

இதனால் புழுக்கள் மற்றும் விஷ கொசுக்கள் உற்பத்தியாவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நிறுவனத்திடம் புகார் செய்து 2 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால் காற்றுக்காக ஜன்னல்களை கூட திறக்க முடியாத அவல நிலையில் உள்ளனர்.

நிர்வாகத்திடம் கூறினால் மரியாதையின்றி தரம் குறைவாக பேசுகின்றனர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கூடிய விரைவில் இந்த கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யுமாறு எவர் கோல்டு காம்ப்ளக்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img