Wednesday, December 17, 2025

தேர்தலில் வென்றால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்… ராகுல் அதிரடி அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

லோக்சபா தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சி புதிது புதிதாக நிறைய வாக்குறுதிகளை அளித்து தேர்தல் களத்தை சூடாக வைத்து இருக்கிறது.

இந்த நிலையில் இன்று கேரளாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை மையமாக வைத்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

ராகுல் காந்தி தனது பேச்சில், காங்கிரஸ் கட்சி ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் வென்றது. அங்கு நாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கி உள்ளோம். ஏற்கனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.

தேர்தலில் பெண்களும் இளைஞர்களும் அதிகம் வாக்களிக்க வேண்டும். இவர்கள் தேர்தலில் பங்கு கொள்வதே நாட்டிற்கு நல்லது. இளைஞர்களுக்கு மட்டும் அதிக கவனம் செலுத்தி வேலைவாய்ப்பை உருவாக்குவோம். பிரதமர் மோடி 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கியதாக பொய் சொல்லியுள்ளார்.

மத்தியில் காங். ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மசோதா பெண்களுக்கு அதிக உரிமைகளை அளிக்கும். ஆட்சிக்கு வந்ததும் இதை நிறைவேற்றுவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். இப்போது ராகுல் இப்படி அறிவித்து இருப்பது இன்னொரு அதிரடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img