Saturday, February 7, 2026

என்னையே கண்காணிக்கிறாயா என்று ட்ரோன் கேமரா மீது கல்வீச்சு, இளைஞர் கைது…!

spot_imgspot_imgspot_imgspot_img

சீர்காழி அருகே ஊரடங்கை கண்காணித்த காவல்துறை ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றி திரிபவர்களை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். கடந்த 24-ஆம் தேதி எடமணல் கிராமத்தின் வயல் வெளியில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.

இதனை அறிந்த அனைவரும் வயல்வெளியில் இருந்து தப்பியோடினர். அதில் ஒருவர் ட்ரோன் கேமரா மீது கல்லால் தாக்க முயற்சித்தார். ஆனால் கேமரா அருகே வந்ததும் அவரும் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வயல் வெளியில் கிரிக்கெட் விளையாடிய 10 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்த சீர்காழி போலீசார் அவர்ளை வீட்டிலிருப்போம், விலகியிருப்போம், கிரிக்கெட் விளையாட மாட்டோம் என உறுதி மொழி ஏற்கவைத்து எச்சரித்து அனுப்பினர்.

மேலும் கேமராவை தாக்க முயற்சித்த எடமணல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img