Monday, March 30, 2026

என்னையே கண்காணிக்கிறாயா என்று ட்ரோன் கேமரா மீது கல்வீச்சு, இளைஞர் கைது…!

spot_imgspot_imgspot_imgspot_img

சீர்காழி அருகே ஊரடங்கை கண்காணித்த காவல்துறை ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றி திரிபவர்களை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். கடந்த 24-ஆம் தேதி எடமணல் கிராமத்தின் வயல் வெளியில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.

இதனை அறிந்த அனைவரும் வயல்வெளியில் இருந்து தப்பியோடினர். அதில் ஒருவர் ட்ரோன் கேமரா மீது கல்லால் தாக்க முயற்சித்தார். ஆனால் கேமரா அருகே வந்ததும் அவரும் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வயல் வெளியில் கிரிக்கெட் விளையாடிய 10 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்த சீர்காழி போலீசார் அவர்ளை வீட்டிலிருப்போம், விலகியிருப்போம், கிரிக்கெட் விளையாட மாட்டோம் என உறுதி மொழி ஏற்கவைத்து எச்சரித்து அனுப்பினர்.

மேலும் கேமராவை தாக்க முயற்சித்த எடமணல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img