Wednesday, March 18, 2026

‘அதிரை எக்ஸ்பிரசும், இளநீர் சுவையும்’ – தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வாழ்த்து !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையர்களின் இணையத்துடிப்பான அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் 13 ஆண்டுகளை கடந்து 14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வறுகின்றனர். இந்நிலையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அதிரை எக்ஸ்பிரசிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

அன்புக்குரிய அதிரை உறவுகள் அனைவர் மீது ஏக இறைவனின் அமைதியும், ஆசியும் உரித்தாகுக!

அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் 13 ஆம் ஆண்டில் களம் புகுவது அறிந்து மகிழ்கிறேன். மனமுவந்து வாழ்த்துகிறேன்.

அதிராம்பட்டினம் என் மண்வாசனையோடு தொடர்புடைய பூமி என்பதால், எனக்கு இயல்பான உறவுகளும், தோழமைகளும் அங்கு நிறைய உண்டு.

பாராம்யமும், பண்பாடும், கலாச்சாரமும், விருந்தோம்பலும் அதிரையின் சிறப்புகளில் சில.அதில் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளமும் ஒன்றாக இணைந்திருக்கிறது.

இன்று அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக இணையதள ஊடகங்கள் என மூன்று வகையில் செய்தித் துறை வளர்ச்சியடைந்துள்ளது.

முன்பு அச்சு ஊடகங்கள் நடத்தியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.கடனில் மூழ்கினர். அதில் வென்றவர்கள் மிகவும் குறைவு.

காட்சி ஊடகங்கள் என்பது கார்ப்பரேட்டுகளின் கரங்களுக்கு போய் விட்டது.

இச்சூழலில் சாமனியர்களின் குரலை சமூக இணைய தளங்களே எதிரொலிக்கின்றன.

அவைதான் கருத்துரிமையை ஜனநாயகப்படுத்தியுள்ளன.

இன்று மக்களிடம் உடனுக்குடன் செய்திகளை பரிமாறுவது சமூக இணைய தளங்கள் தான்.

சில நேரம் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் அச்சு ஊடகங்களையும், காட்சி ஊடகங்களையும் அதே திசையை நோக்கி திருப்புகின்றன என்பதே உண்மை.

அந்த வகையில் உலகமெங்கும் பரந்து விரிந்து வாழும் அதிராம்பட்டினம் மக்களை இணைக்கும் ஒரு செய்தி தளமாக ; கடந்த 13 ஆண்டுகளாக அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் இயங்கி வருவது பாராட்டுக்குரியது.

கடல் கடந்து வாழ்ந்தாலும், இதை பார்க்கின்றப் போது ஊரோடு உலா போவது போன்ற உணர்வுகளை தரும்.

ஊர் சார்ந்த இணைய தளங்களின் சிறப்பே அது தான்.

அந்த வகையில்,அதிரையின் இளநீரைப் பருகி மகிழும் இன்பத்தை போல, அதிரை எக்ஸ்பிரஸ் செய்திகளை தருகிறது என்பது உண்மை.

இது படிப்படியாக பரிணாம வளர்ச்சியை பெற்று உச்சம் தொட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

வாழ்த்துக்களுடன்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய
ஜனநாயக கட்சி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img