Friday, March 20, 2026

மல்லிப்பட்டிணம் சுற்றுவட்டார பகுதியில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி முழுவதும் கடைகள் திறப்பு நேரம் ஒரு வாரத்திற்கு காலை 6 மணி முதல் 2மணி வரை மட்டும் என ஊர் பொதுமக்கள் முடிவு.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தஞ்சை மாவட்டத்தில் சுய ஊரடங்கை,கட்டுப்பாடுகளை தங்களுக்கு தாங்களே பல்வேறு கிராம,பேரூராட்சி, நகராட்சி பகுதி மக்கள் கடைகள் அடைப்பு,கடை திறப்பு நேரம் குறைத்தல் போன்ற பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் ஊர் பொதுமக்கள், வணிகர் சங்கங்கள், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு சங்கங்கள் இணைந்து இன்று(ஜூலை.21) மாலை 4 மணிக்கு ஈசிஆர் சாலையில் உள்ள வினோத் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பால்,மருந்தகங்கள் மட்டும் இரவு 8 மணிவரை செயல்படலாம்,ஏனைய கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி,உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி, வணிகர்கள்,பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்திட வேண்டும்,ஊராட்சி முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மாத்திரைகளை சுகாதர துறை வினியோகிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img