Sunday, February 1, 2026

தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பில் 105வது ரத்ததான முகாம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 105வது இரத்ததான முகாம் தஞ்சை மாவட்டம் கண்டியூர், முஹம்மத் பந்தர், திருப்பந்துருத்தி கிளைகள் சார்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு 71 யூனிட் ரத்தம் தானமாக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

இம்முகாமில் மாவட்ட செயலாளர் வல்லம் ஜாபர், மாவட்ட துணை செயலாளர் அப்துல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கண்டியூர் முஹம்மத் பந்தர் திருப்பந்துருத்தி கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img