Thursday, December 4, 2025

அதிரை அருகே விபத்து – இருவர் படுகாயம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சேண்டாக்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் பட்டுக்கோட்டையில் வேலை செய்து வருகிறார். பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அசோக். இவர் அதிராம்பட்டினத்தில் வேலை செய்து வருகிறார்.

ரியாஸ் அகமது வேலை முடிந்து அதிரைக்கும், அசோக் வேலை முடிந்து பட்டுக்கோட்டைக்கும் திரும்பி கொண்டிருந்தனர். இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில் சேண்டாகொட்டை அருகே நேரெதிரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த எதிர்பாராத விபத்தில் ரியாஸ் அகமது, அசோக் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அசோக்
ரியாஸ் அகமது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img