Thursday, March 19, 2026

அதிரை மீன் மார்க்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் – களையெடுத்த கலெக்டர்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டிணம் தக்வா மீன் மார்கெட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனையடுத்து அதிராம்படினம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில், காவல் ஆய்வாளர் ஜெயமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கொரோனா விதிமுறைகள் மீறப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

தகவலை அடுத்து பட்டுக்கோட்டை துணையாட்சியர் பாலச்சந்திரன் இன்று நேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மார்கெட்டில் கொரோனா விதிமுறைகள் மீறப்படுவதை உறுதி செய்து நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை தக்வா மீன் மார்கெட்டை மூட உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக தக்வா பள்ளி ட்ரஸ்ட் சார்பில் மீன் மார்கெட் வியாபாரிகளிடம் முறையாக கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல் செய்தபிறகும் கூட அதனை வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் கடைப்பிடிக்கவில்லை. இதனாலேயே இந்த மீன் மார்கெட் மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தக்வா மீன் மார்க்கெட் மூடப்படும் என்ற அறிவிப்பினால் காய்கனி, இறைச்சிகூடங்களும் பாதிக்கப்படுவதாக அவ்விரு வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img