Friday, March 20, 2026

மின் வெட்டிற்கு நாங்கள் காரணமல்ல- மறுக்கிறார் அணிலார்.

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கு, அணில்களும் காரணமாக உள்ளன என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி இருந்தார்.

தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அவர், பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளன. கிளைகள் இந்த கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது.

மேலும், அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக அணில்கள் தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள
தமிழ்நாடு அணில்கள் சங்க தலைவர் அணிலாரை சந்தித்தோம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு காரணமாக மிகுந்த அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் ஆளாகி, ஒரு நீண்ட மதில் சுவரின் பொந்துக்குள் பதுக்கி இருந்த அணிலார் மிகுந்த தயக்கத்துடன் கூறியதாவது.

தமிழ் நாட்டில் ஏற்படும் மின்வெட்டுக்கு எந்த வகையிலும் நாங்கள் காரணம் இல்லை என்றும், மின்சாரத் துறை அமைச்சரின் குற்றச்சாட்டில் சிறிதளவும் உண்மை இல்லை தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு காரணமாக எங்களது அணில்கள் இனத்துக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது என்றும், எங்கள் அணில் இனத்தை ஈவு இரக்கமின்றி வேட்டையாடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறோம் என கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img