Tuesday, February 10, 2026

அதிரை அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் தேவை! ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் கோரிக்கை !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

பன்னெடுங்காலமாக செயல்பட்டு வரும் இக்கல்வி ஸ்தாபனத்தில் ஏராளமான அதிரையர்கள் கல்வி பயின்று இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பழுதடைந்த வகுப்புகளை அகற்றிவிட்டு புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என கூறப்பட்டது.

ஆனால் போதிய அளவு வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கன மழையினால் நீர் வகுப்பறைகளை சூழ்ந்தது.

இதனால் மாணாக்கர்கள் கல்வி பயில இயலவில்லை, இதுகுறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நகர திமுக செயலாளர் இராம குணசேகரன் மற்றும் 13வது வார்டு திமுக பொறுப்பாளர் சமூக ஆர்வலர் சைஃபுதீன் ஆகியோர் பள்ளிகூடத்தின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும், குறிப்பாக போதிய வகுப்பறை வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தருமாறு என கேட்டு கொண்டனர்.

இதனை ஏற்ற அதிகாரிகள் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி மாலதி கல்வித்துறை அதிகாரி உள்ளிட்டவர்களை வரவேற்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img