நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட அதிரையில் வார்டு மறுவரையரை செய்ததில் ஆளும் திமுகவினர் குளறுபடிகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மக்கள் தொகையைவிட வாக்காளர்கள் எப்படி அதிகம் வந்தனர் என்ற கேள்விக்கு இன்று வரை உரிய பதில் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கடந்த மாதம் அதிரை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் இருப்பதால் கடந்த பிப்ரவரி 4ம் தேதி அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கிருஷ்ணா ராமசாமி, பாரெஷ் உபத்யாய் அமர்வு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே அதிரை நகராட்சி வார்டு மறுவரையரை தொடர்பாக தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம், அதிரை நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதிரை தொடர்பான வழக்கின் மீது தொடர்ந்து விசாரணை நடைபெறுவது உள்ளூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Legal breaking: அதிரை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்! அதிரையர்களுக்கு கிடைக்குமா நீதி??
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





