Wednesday, February 11, 2026

தலைவர் சொல்லியே கேட்காத அதிரை கவுன்சிலர்கள்! இனி யாரிடம் முறையிடுவோம்? கலக்கத்தில் வாக்காளர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் உள்ளூர் திமுக கவுன்சிலர்கள் சதி செய்து அந்த பதவியில் திமுக நகர செயலாளர் இராம.குணசேகரனை அமர வைத்துவிட்டனர். பின்னர் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், உடனடியாக கூட்டணி தர்மத்தை மீறிப்பெற்ற உள்ளாட்சி மன்ற பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுகவினருக்கு கட்டளையிட்டார். இந்த கட்டளையை 10 நாட்கள் ஆகியும் நிறைவேற்றாமல் மாவட்ட திமுக நிர்வாகமும் அக்கட்சியின் கவுன்சிலர்களும்  காற்றில் பறக்க விட்டுள்ளனர். குற்ற உணர்ச்சியால் தான் குறுகி நிற்பதாக ஒரு தலைவர் சொன்ன பிறகும் கூட்டணி தர்மத்தை மீறிப்பெற்ற பதவியை திமுக நகர செயலாளர் ராஜினாமா செய்ய தயாராக இல்லை.

அதிரை திமுக சார்பில் வென்றவர்கள் யாரும் தங்களது சொந்த செல்வாக்கில் வெல்லவில்லை. மாறாக மாநிலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி இருக்கிறது. ஆதலால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள், அப்போது தான் அதிரை ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடையும் என கூறி ஓட்டு கேட்டு வென்றனர். இங்கு அதிரை திமுக கவுன்சிலர்களுக்கு விழுந்த ஒவ்வொரு ஓட்டும் உதயசூரியனுக்கானது, அதனை தலைமை ஏற்று நடத்தும் மு.க.ஸ்டாலினுக்கானது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்காக நாங்கள் போட்ட ஓட்டுகளை வாங்கி வெற்றிபெற்றுவிட்டு இப்போது மு.க.ஸ்டாலினுக்கே அதிரை திமுக கவுன்சிலர்கள் கட்டுப்பட மறுப்பது பேரதிர்ச்சியாக இருப்பதாக வாக்களித்த வாக்காளர்கள் கூறுகின்றனர். மேலும் இனி திமுக கவுன்சிலர்கள் முறையாக வேலை செய்யாவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவோம் என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img