Wednesday, March 25, 2026

முத்துப்பேட்டை: குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் – பேரூராட்சி முற்றுகை –

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வழங்கலில் கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் முத்துப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் முறையாக குழாய்களில் நீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை.

இதுகுறித்து SDPI மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை
05, 08, 12, 14 மற்றும் 15 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் SDPI கட்சியின் மன்ற உறுப்பினர்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக ADSP திரு.வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் குடிநீர் வழங்கலை சமாளிக்க திட்டமிடுவதை விடுத்து, ‘மேலிடத்தில் கேட்டுச் சொல்வதாக’ மன்றத் தலைமை பொறுப்பற்ற பதிலை சொல்லிக் கொண்டிருக்கிறது என்றும் இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆர்பாட்டகாரர்கள் கோஷமிட்டனர்.

இதனிடையே அதிகாரிகளிடம் காவல் உயரதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் விரைவாக இப்பிரச்சினை தீர நிரந்தர நடவடிக்கைகள மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img