Tuesday, March 24, 2026

சென்றுவா ரமளானே! கொண்டுசேர் அமல்களை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அங்கமும் ஆன்மாவும் நோன்பிருந்துத்

தங்கமென புத்துணர்வை யூட்டி

தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி

நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி

கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்

கடமையைச் செய்ய கருணை வரவாய்

உடனிருந் தாயே உளம்நிறை தோழா

விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து

மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா

பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்

மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்

கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே

கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சக்காத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!

ஆக்கம்:

“கவியன்பன்” கலாம்,

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img