Thursday, May 2, 2024

அரஃபாத்!

Share post:

Date:

- Advertisement -

வெள்ளுடையில் பாவக்கறை
வெளுக்கும் வண்ணான் துறை

ஆதி பிதாவும் அன்னையும்
சந்தித்த “அருள்மலை”த் திடல்
ஆகிரத்தின் “மஹ்ஷரை” நினைவூட்டும் மக்கள் கடல்!

ஒருநிமிடமேனும் தரிபட
நிறைவேறும்
ஹஜ் எனும் பேறு
கருவிலிருந்து பாவக்
கறையின்றி வெளியாகும் சிசு போன்று !

கனவினை மெய்ப்டுத்த
“கலீலுல்லாஹ்”அறிந்த இடம்
“காத்தமுன் நபி” இறுதிப் பேருரையின்
கட்டியம் கூறும் தடம்!

பாலுக்கு அழும்
பச்சிளம் பிள்ளை போல்
பாவமன்னிப்பால் “ஈமானின்”
பசிக்கு அழும் நாள்!

நிறைவான மனத்தினில்
நிம்மதி “ஆக்ஸிஜனாம்”
இறையின் காதலுக்குள்
இணையும் ஆன்மாவாம்!

கண்ணீர்க் கடலாகும்
பாலையின் பெருவெளி
எண்ணங்கள் தெளிவாக்கும்
ஏற்றிடும் “கல்பின்” பேரோளி!

ஆக்கம்;
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்.

குறிப்பு:

“அருள்மலை”= ஜபலர்ரஹமத்

“மஹ்ஷர்” = மறுமையில் விசாரணைத் திடல்

” கலீலுல்லாஹ்”= இறைவனின் நண்பர்

“காத்தமுன் நபி”= இறுதி நபி

“கல்பு”= உள்ளம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...