Tuesday, March 24, 2026

எழுதுகோல்

spot_imgspot_imgspot_imgspot_img

சமூக விழிப்புணர்வின்
ஒரு நெம்புகோல்
கவியாட்சியின்
செங்கோல்!
ஒற்றை நாவாய் வந்து
உலகத்தைப் பாடும்
பழுதுபட்டுப்
பாழடைந்த உள்ளங்கள்
எழுதுகோலின்
மொழி விளக்கொளியால்
விழிக்கட்டும்!
பென்சில் முள்ளில்
தானாய் வந்து விழும்
மலர்களைக் கோத்து
மணம் வீச வைப்பீர்!
உதிரும் உறவுகளில்
உதிராத ஓர் உன்னத
வாடா மலராக
வார்த்தைகள் மலரும்!
பென்சில் கூர்”மை”
உண்மை
ஊற்றப்பட்டுத்
திண்மையைப்
பேசிடும் தன்மை!

மதத்தைக் கீறாத
பதமான மனிதநேய
இதமானவைகளாய்
இருக்கட்டும்!

-கவியன்பன் கலாம்,

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img