Thursday, March 19, 2026

அதிரை எக்ஸ்பிரசிடம் நாடாளுமன்ற உறுப்பினரின் பாராட்டு கடிதங்கள் ஒப்படைப்பு!! மிக விரைவில் பரிசளிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் உட்பட 33 பேர் பரிசுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை பாராட்டி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் துணை தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி பாராட்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதங்களை அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் உசேனிடம் முஸ்லீம் லீக் நகர செயலாளர் வழக்கறிஞர் முனாஃப் ஒப்படைத்தார். அப்போது நகர துணை தலைவர் வழக்கறிஞர் முகம்மது தம்பி, மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது, ஐடி விங் பொறுப்பாளர் ஹசன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த பாராட்டு கடிதங்கள் விரைவில் நடைபெற இருக்கும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img