Saturday, April 4, 2026

கிடைத்த வாய்ப்பில் கோல் அடித்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நரியம்பாளையத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது விழாவில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய பேருந்துநிலையம் அமைக்க நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பட்டுக்கோட்டையில் மார்க்கெட் மற்றும் சீர்மிகு பள்ளி திட்டங்களை சுட்டிக் காட்டிய அவர், பாதாள சாக்கடை திட்டத்தையும் பட்டுக்கோட்டை நகரில் செயல்படுத்தி கொசுத்தொல்லை இல்லாத நகராக பட்டுக்கோட்டையை மாற்ற கோரிக்கைவிடுத்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையை அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட...

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை...

​அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது....

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து –...

100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க...
spot_imgspot_imgspot_imgspot_img