Wednesday, March 18, 2026

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வை கைது செய்ய சொல்லும் அதிரை திமுக! தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்!! தமுமுக தொண்டர்கள் எச்சரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டவிரோதமாக சீல் வைக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லீம் கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளிக்கு ஆதரவாக பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், சிறுபான்மை கல்வி நிலையத்திற்கு திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் ஏற்படுத்தும் இடையூறுகள் குறித்தும் பேசினார். மேலும் இவரின் சிறுபான்மை மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் எனவும் கூறினார்.

இந்தநிலையில், அதிரை காவல்நிலையத்திற்கு சென்ற சில திமுகவினர், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வை கைது செய்ய சொல்லி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர தமுமுக-மமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிரை காவல் நிலையம் சென்று விவரம் கேட்டுள்ளனர். அப்போது நம்மிடம் பேசிய தொண்டர்கள், சமூதாய தலைவரான ஜவாஹிருல்லா-வை கைது செய்தால் தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க செய்வோம் என ஆவேசத்துடன் கூறினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img