Wednesday, March 18, 2026

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை.

இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி ஒருவர் கூறுகிறார்.

கடந்த காலங்களில் மழைநீர் அருகாமையில் உள்ள திடலை கடந்து வாய்க்காலில் சென்றடையும், ஆனால் தற்பொழுது அருகாமையில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகம் திடலை மேம்பாடு செய்திருக்கிறது.

இதனால் அவ்வப்போது பெய்யும் மழை நீர் ஓடவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் தஞ்சமடைகிறது.

நள்ளிரவு பெய்த கடும் மழையினால் தமது வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளதால் படுக்கக்கூட இடமின்றி தவிப்பதாக தீனுன் நிசா என்ற சகோதரி தெரிவிக்கிறார்.

மேலும் கவுன்சிலர் மன்சூரின் கவனத்திற்கு பலர் இந்த விவகாரத்தை எடுத்து சென்றும் பலனில்லை என்பதால்.

நகர்மன்ற தலைவரின் கவனத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்.

ஆனால் இதுவரையில் எந்த அதிகாரியும் எங்களை சந்திக்கவில்லை என்றும் அவர்களை சந்திக்க இப்பகுதி மக்களை ஒன்று திரட்டி நகராட்சியை முற்றுக்கையிட செல்ல உள்ளதாக தீனுன் நிசா தெரிவிக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...
spot_imgspot_imgspot_imgspot_img