Wednesday, March 18, 2026

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம் தழுவிய அளவில் வழங்கி வருகிறது.

அதேபோல் உயிர்காக்கும் உன்னத பணிகளான சாலை விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் தன்னை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார்கள்.

அதன் வரிசையில் கடந்த சில மாதங்களாக அதிரை நகரில் சாலை விபத்துக்களால் உயிர் இழக்கும் சூழல்கள் உருவாகி வருவதை தடுக்கும் நோக்கில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன் படி அதிரை நகரின் முக்கிய இடங்களில் சாலைத்தடுப்பு (பேரிகார்ட்) அமைத்து வருகிறார்கள்.

இன்று இரண்டு இடங்களில் அமைக்கப்பட்ட பேரிகார்டை உள்ளூர் காவல்துறை மற்றும் CBD நிர்வாகத்தினர் அமைத்தனர்.

இதில் CBDயின் மாவட்ட தலைவர் பேராசிரியர் கபீர் சார், 24வது கவுன்சிலரும் அதிரை நகர CBDயின் நிர்வாகியுமான அப்துல் மாலீக், நூர் முகம்மது, ஆரிஃப், பக்ருதின், TIYA மாலீக், முஸ்தாக் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

CBDயின் உயிர்காக்கும் இந்த உன்னத பணியினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img