Wednesday, March 18, 2026

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்று சுழற்சியே இந்த கோடை மழைக்கான காரணியாக கூறப்படுகிறது. இந்த காற்று சுழற்சி, தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதியில் நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று கோடை மழை கொட்டி தீர்த்தது.

அதிராம்பட்டினத்தில் இன்று சனிக்கிழமை காலை முதலே வெளியின் தாக்கம் இன்றி, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணியளவில் மழை பொழிய துவங்கியது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் தொடங்கிய மழை, ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழையாக கொட்டித் தீர்த்து வருகிறது.

இதன் காரணமாக வெப்பம் தணிந்து நகர் முழுவதும் குளுமையான சூழல் நிலவுவதால், கடும் வெப்பத்தால் தவித்துவந்த பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img