Sunday, February 1, 2026

அதிரையில் நாளை ஆரம்பமாகிறது புஹாரி ஷஃரீப் : ஊரில் உள்ளவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதமான துல்கஃதா மாத இறுதில் புஹாரி ஷரீஃப் ஆரம்பித்து தொடர்ந்து 40 நாட்கள் புஹாரி ஹதீஸ்களை ஓதி அதற்குரிய சொற்பொழிவுகளை எடுத்துக் கூறி ஊர் ஒற்றுமை, உலக நன்மை மற்றும் புதுப்புது கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.

அது போல இவ்வருடத்திற்கான புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நாளை 28.05.2025 புதன்கிழமை காலை காலை 6 மணிக்கு திக்ர் மஜ்லிஸ் துவங்கி, புஹாரி ஷரீஃப் ஓதப்பட்டு பின்னர் 7.40 மணிக்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் தலைமையில், ஒவ்வொரு நாளும் உலமாக்கள் பலர் மார்க்க சொற்பொழிவாற்ற உள்ளனர்.

90 வருடத்திற்கும் முன்னதாக, அதிரையில் ‘காலரா’ எனும் பெரும் நோயால் அதிரையர்கள் அவதிப்பட்டு நாளுக்கு நாள் உயிர் பலி ஆகி கொண்டிருந்த இக்கட்டான சூழலில், மர்ஹூம் ஷைகுனா ஆலிம் அவர்களின் வழிகாட்டலில், உலமாக்களின் ஆலோசனையின் படி அதிரையில் தொடர்ந்து 40 நாட்கள் திக்ர் மற்றும் அதனைத் தொடர்ந்து புஹாரி ஷரீஃப் ஓதுவது என தீர்மானிக்கப்பட்டு தொடர்ந்து ஓதப்பட்டு வந்ததன் விளைவாக, இப்போது இந்த தலைமுறை வரை அதிரையில் காலரா என்கிற நோய் எட்டிப்பார்க்கவில்லை என்பது வரலாறாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img