Sunday, February 1, 2026

2 ஆயிரம் ரூபாய் வரை கார்டு ஸ்வைப் பண்றீங்களா ? இனி பறிமாற்ற கட்டணம் இல்லை…!!

spot_imgspot_imgspot_imgspot_img

டெபிட் கார்டு மூலம் 2 ஆயிரம ரூபாய் வரை பொருட்கள் வாங்கிவிட்டு கார்டு ஸ்வைப் பண்ணினால் இனி பறிமாற்றக் கட்டணம் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கைளை மத்திய அரசு தொடங்கியது. இதையடுத்து ரொக்க பணப்பறிமாற்றங்களை குறைத்துக் கொண்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணப்பறிமாற்றங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு கட்டாயமாக்கும் முயற்சிகனை மேற்கொண்டது. பணப்பறிமாற்றத்துக்கு கார்டுகளை பயன்படுத்துபவர்களை ஊக்குவிக்க பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய பரிமாற்ற கட்டணத்தை அரசே ஏற்பது என்ற பரிந்துரைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி டெபிட் கார்டு, பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ., ஆதார் மூலம் செயல்படுத்தப்படும் கட்டணம் செலுத்துதலுக்கு ரூ.2 ஆயிரம் வரை பரிமாற்ற கட்டணம் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது .

இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இது 2 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் இதன்மூலம் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு ஏற்படும் என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மத்தியதர மக்களுக்கு மகிழ்ச்சியை அறித்துள்ளது. இதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img