அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளி நிர்வாக சீரமைப்பு மற்றும் பள்ளி சொத்தை பாதுகாக்கும் ஆலோசனை கூட்டம் இன்று(27/01/2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தின் அமீராக அன்ஸாரி (அல்-அமீன் பள்ளி நிர்வாகி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இக்கூட்டத்திற்கு எம்.பி அபூபக்கர் (கோட்டை அமீர்) முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் தக்வா பள்ளியின் நிர்வாக குளருபடிகள் மற்றும் கடைத்தெரு கடைகள் மூலம் பெறப்படும் வருமானம் பற்றி பேசபட்டது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்:–
1). மீண்டும் 31/01/2018 புதன் காலை 10 மணியளவில் தக்வா பள்ளி முஹல்லாவாசிகளை அழைத்து கூட்டம் நடத்துவது மற்றும் அதற்கு மக்களை ஒருங்கிணைப்பது.
2). மேலாளர் நியமனம் மற்றும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து வக்ப்போடிற்கு புகார் அனுப்புவது.
3). 20 நபர்கள் கொண்ட முஹல்லா இளைஞர் குழுவை அமைத்து தக்வா பள்ளி நிர்வாகத்தில் தலையீடு செய்து குளருபடிகளை சரிசெய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக இக்கூட்டத்தை ஏ.ஜே. ஜியாவுதீன் அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார்.
இறுதியில் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.