Monday, May 20, 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10) வெளியாகவுள்ளன.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது.

சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10) வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தேர்வு முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது

மேலும், இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள்

www.dge.tn.gov.in

www.tnresults.nic.in

https://results.digilocker.gov.in

ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.

அது மட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் தேசிய தகவல் மையம், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும்,
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....