தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு 15வார்டு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காட்டுப்பள்ளி தர்காவிற்கு செல்லும் வழியில் உள்ளப்பாலம் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகள் பார்வைக்கு எடுத்து சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார் தெருவாசி சுலைமான் மேலும் நம் நிருபர் அவரிடம் விசாரித்ததில் அதிரை பேரூராட்சி சில மாதங்களுக்கு முன்பு டெங்கு என்ற போர்வையில் மனித உயிர்களை பழிவாங்கியதாகவும் இப்பொழுதும் அதேபாணியில் இந்த பாலம் வாயிலாக மனித உயிர்களை பழிவாங்க காத்து இருப்பது போன்ற அச்சம் ஏற்படுகிறதாகவும், இந்த பாதையை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிகம் பயன்படுத்திகிறார்கள் என்றும் பேரூராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பச்சத்தில் அதிரை பேரூராட்சி முற்றிகை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்..