Sunday, March 22, 2026

அதிரையில் அரசு பணம் 50 லட்சம் வீண் !! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட நடுத்தெருவில் அமைந்துள்ள செட்டியார் குளம், கடந்த காலங்களில் கழிவு நீர் குளமாக காட்சியளித்தது, இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவியது.

இதனை அடுத்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி தளம் “அதிரையில் ஒரு சின்ன அமேசான் காடு கண்டுபிடிப்பு” என்ற தலைப்பில் காணொளி காட்சி தொகுப்பை உள்ளது உள்ளபடி வெளியிட்டு மக்கள் மத்தியில் இக்குளத்தின் தூய்மையின் அவசியத்தை எடுத்து சென்றது.

இதன் காரணமாக சுறுசுறுப்பான மாவட்ட நிர்வாகம் முன்னதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹50 இலட்சத்தை கொண்டு மேற்கண்ட குளத்தை புனரமைப்பு செய்ய டெண்டர் விடப்பட்டு வேலைகள் முடுக்கி விடப்பட்டது , இதன் பின்னர் அசுர வேகத்தில் பணிகள் முடிவடைந்தன.

ஆனால் இந்த குளத்தில் நீர் நிரப்ப குழாய்கள் பதிக்காமல் அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இதனால் அக்குளத்திற்கு ஆற்று நீர் வரவில்லை.

இந்நிலையில் அவ்வழியாக செல்லும் கழிவு நீர் கால்வாயை சமூக விரோதிகள் யாரோ உடைத்து கழிவுநீரை மீண்டும் குளத்திற்குள் நிரப்பி வருகின்றனர்.

இதன் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும், அக்குளத்தில் உற்பத்தியாகும் கொசுவால் டெங்கு உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் தாக்கும் சூழலும் உள்ளது.

எனவே மேற்கண்ட குளத்தை புனரமைப்பு செய்து மீண்டும் நன்னீர் குளமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், சமூக விரோத செயலில் ஈடுபட்ட நபரை கண்டறிந்து உரிய நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

புதிய காணொளி காட்சி பழைய நிலைமைக்கு வருகிறது அதிரை செட்டியன் குளம்

 

அதிரையில் ஒரு சின்ன அமேசான் காடு கண்டுபிடிப்பு” என்ற தலைப்பில் காணொளி காட்சி

https://youtu.be/K1UHWGm25P8

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img