Home » ஜனநாயகத்தின் நான்காவது தூணை தகர்க்கும் EPS,OPS !!

ஜனநாயகத்தின் நான்காவது தூணை தகர்க்கும் EPS,OPS !!

0 comment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் இபிஎஸ்,ஓபிஎஸ் கூட்டனியினர் மத்திய பாஜக அரசுக்கு சாதகமான சூழலையே உருவாக்க முனைகிறது.

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும், ஜனநாயகத்தின் குறலாக ஒலிக்கும் ஊடகவியலாளர்களை கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டன.

இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்களை தவறாக பேசிய SVசேகர் மீது வழக்கு பதியபட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க கோரியும் மாநில அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் தனது கருத்தை முகநூல் வாயிலாக வெளிப்படுத்தினார் என்பதற்காக அவரை விசாரணை என்ற பெயரில் சுமார் 14மணி நேரம் சிறைப்படுத்தி வைக்கப்பட்டார்.

ஜனநாயக ரீதியில் தனது கருத்தை வெளிபடுத்த இந்தியர்கள் அனைவருக்கும் இருக்கும் பட்சத்தில்.

மத்தியில் ஆளும் பாஜகவினரின் திருப்திக்காக மட்டுமே இந்த அரசு செயல்படுவதாக தெரிகிறது.

குற்றவாளி ஒருவர் எந்தவித சலனமும் இன்றி ஊர்திரியும் போது ஜனநாயகத்தின் நான்காவது தூனாக இருக்கும் ஊடகத்தை உடைக்க நினைப்பது ஏனோ ?

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter