பட்டுக்கோட்டை , அதிராம்பட்டினம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு சில நாட்களில் தண்ணீர் கிடைத்துவிடும் என கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பேட்டியளித்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விட்டதாகவும் அந்த பகுதிகளில் செல்லாத இன்னும் ஒரு சில இடங்களுக்கும் இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் சென்றடையும் என்றும் வேளாண் காப்பீட்டு உரிய இழப்பீட்டுத் தொகை சில இடங்களில் கிடைக்காததற்கு ஒரு சில வங்கிகளே காரணம் என்றும் முக்கொம்பு மேலணை சேதமடைந்ததால் ஒரு வார காலம் தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டது என்றும அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவு பெற்றதும் தண்ணீர் வழக்கமான அளவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.