தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், ஆலடி குலத்திற்கு சாஸ்திர ஏரியிலிருந்து இரு தினங்களில் பம்பிங் மோட்டார் மூலம் தண்ணீர் வரவுள்ளது.
சாஸ்திரா ஏரியிலிருந்து வருடாவருடம் அதிரை மின்வாரியம் துணையுடன் தண்ணீர் கொண்டுவரப்படுகின்றது குறிப்பிடத்தக்கது, அதுபோல் இவ்வருடமும் சாஸ்திரா ஏரியிலிருந்து தண்ணீரானது பம்பிங் மோட்டார் மூலம் கொண்டுவரபடவுள்ளது.
தண்ணீர் வருவதற்கான முன்னேற்பாடுகள் இன்று காலை முதல் துவங்கப்பட்டளது.
அதனைத்தொடர்ந்து இன்று(06/10/2018) காலை அதிரை பேரூராட்சி துப்புணர்வு பணியாளர்கள் மூலம் தண்ணீர் வருகின்ற பாதையினை சரி செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனை அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் பிச்சை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன் முதற்கட்டமாக இன்று(06/10/2018) வண்டிப்பேட்டையில் துவங்கப்பட்டு வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.