ஏறிப்புறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்டது பிலால் நகர் அதிரையின் அங்கமாக இருக்கும் இப்பகுதியின் உள்ளாட்சி நிர்வாகம் ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டு உள்ளன.
BDOவின் நேர்பார்வையில் இயங்கும் இவ்வூராட்சியில் கலா என்ற அலுவலக பொறுப்பாளர் உள்ளதாகவும், பிலால் நகரின் அவலங்களை மக்கள் புகாராக அளித்தாலும் கண்டுக்கொள்ள வில்லை என கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது அதிகாரிகளிடம் அப்பகுதி நன்றாக உள்ளது என கூறி ஆய்வு நடத்த விடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மறைந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்து கிருஷ்னன் பணிக்காலத்தில் இருந்த போது கூட மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது எனவும், அவரின் மறைவுக்கு பின்னர் கலாவின் கள்ள மொவுனம் புரியவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
கடந்த பத்து நாளைக்கு முன்பாக பெய்த சிறு மழையை கூட தாங்க இயலாத பகுதியாக பிலால் நகர் உள்ளதாகவும், தேங்கி நிற்கும் தண்ணீரால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே பஞ்சாயத்து மேம்பாட்டு அலுவலர் (BDO) பிலால் நகரை ஆய்வு செய்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கேட்டுக்கொள்ளகிறார்கள்.