Saturday, December 13, 2025

ஐஜி பொன். மாணிக்கவேலின் பணி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு !

spot_imgspot_imgspot_imgspot_img

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலின் பணியை நீடித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக ரயில்வே மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த மாதம் 30 ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனிடையே சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டது. ஓய்வு பெறும் அதே நாளில் பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக அவர் செயல்படுவார் என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங்கை உயர் அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்த து. ஆனாலும் சிலை கடத்தல் குறித்த வழக்குகளை அனைத்தும், பொன்.மாணிக்கவேலே விசாரிப்பார் என்று உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் பொன் மாணிக்கவேலுக்கு சிறப்பு அதிகாரி பணியை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள ஓராண்டுக்குள் அனைத்து சிலைகளையும் மீட்பேன் என பொன். மாணிக்கவேல் சூளுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img