அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி சாணாவயலில். இப்பகுதியில் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளாலும், தேங்கி கிடக்கும் கழிவுநீராலும் காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சாணாவயல் பகுதியை பார்வையிட்ட பேரூர் அதிமுக செயலாளரும், பேரூராட்சிமன்ற முன்னாள் துணை தலைவருமான பிச்சை மற்றும் பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர், ஊழியர்களை வைத்து முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இந்த ஆய்வின் போது பேரூர் அதிமுக துணை செயலாளர் தமீம், TIYA இளைஞர் அமைப்பு துணை தலைவர் பரோஸ், செயலாளர் சபீர் அகமது, துணை செயலாளர் அஸ்லம், அஃப்ரீத் ஆகியோர் உடனிருந்தனர்.