நாடெங்கிலும் இந்திய குடியரசின் 71 ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வீர தீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்கினார்.
இந்நிலையில் நாடெங்கிலும் NRC,CAA,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்து வருகின்ற வேளையில் இம்முறை தமிழகம் மட்டும்மல்லாது இந்தியாவெங்கும் 71ஆம் குடியரசை கொண்டாடினர்.
அந்த வகையில் அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ நிறுத்த தொழிலாளர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.