தமிழக அரசு நாளை மாலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து சந்தை பகுதிகளை மக்கள் மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட சில வியாபாரிகள் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து காய்கறிகடைகாரர் ஒருவரிடம் கேட்டபோது, காய்கனி, மருந்தகங்கள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களின் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்து இருந்தும் மக்கள் ஒன்றுகூடி படையெடுப்பு நடத்துவது எதனால் என கேள்வி எழுப்பினார்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதின் நோக்கமே, கூட்டமாக மக்கள் கூடக்கூடாது என்பதற்குத்தான். ஆனால் பொதுமக்கள் அதனை புரிந்துகொள்வதாக இல்லை என வேதனை தெரிவித்தனர்.
நாளை அதிரையில் வழக்கம்போல் காய்கனி கடை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறந்திருக்கும். எனவே பொறுமையாக தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள வேண்டுகிறோம்.