Saturday, February 7, 2026

அதிரையில் காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

உலகையே அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது.

இதனை அடுத்து அமல்படுத்த பட்டுள்ள ஊரடங்கில் நாடே ஸ்தம்பித்தன.

இந்நிலையில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட சில பகுதிகளில் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் நடமாடுகின்றனர்.

காவல்துறையினர் எவ்வளவோ எச்சரித்தும் இளைஞர்கள் கண்டுகொள்ளாமல் தேவையின்றி வெளியில் நடமாடும் நிலை தொடர்கிறது.

இதனிடையே அவசியமின்றி வெளியில் சுற்றும் நபர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் அவசிய தேவைக்காக வந்து செல்லும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த கேட்டு கொண்டதன் பேரில், பிள்ளைமார் தெருவில் அமைந்துள்ள இந்தியன் வங்கி வாசலில் காவல்துறையினர் கையில் பதாகை ஏந்தியவாறு விழிப்புணர்வு நிகழ்த்தினர்.

இதனை நகர காவல் ஆய்வாளர் ஜெயமோகன் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை காவல் சரகத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img