Sunday, February 8, 2026

அதிரை நீர்நிலைகளில் முறையாக தூர்வார வேண்டும்! SDPI கட்சியினர் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கரிசல்மணி ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகளவில் ஒரே இடத்தில் பள்ளம் தோண்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து களத்தில்.இறங்கிய அதிரை SDPI கட்சியினர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் சுவை மாறும் என்றும் இதனை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது என தெரிவித்தனர்.

இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சார் ஆட்சியரை சந்தித்த SDPI கட்சியினர், அரசு அனுமதிக்கப்பட்ட அளவில் அனைத்து பகுதிகளும் முறையாக தூர்வார வேண்டும், கரைகளை பலப்படுத்தி அதிரை நீர் நிலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அக்கட்சியின் மாவட்ட தலைவர் புகாரி தலைமயில் சென்ற குழுவினர் மனுவாக வழங்கினர்.

இதனை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு விரைவாக தண்ணீர் வழங்க ஆவண செய்வதாக தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img