அபுதாபியை சேர்ந்த மூன்று நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த தங்களது ஊழியர்கள் 175 பேருக்கு ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மூலம் தனி விமானத்தை பதிவு செய்து தமிழக அரசின் அனுமதி கிடைக்காமல் 3மாதத்திற்கு மேலாக ஊழியர்கள் சிரமப்பட்டு இருந்தனர். அவர்கள் SDPI கட்சியின் நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர். நிஜாம் மொய்தின், மாநில செயற்குழு உறுப்பினர். ஏ.கே.கரீம், திருச்சி மாவட்ட தலைவர்.ஹஸ்ஸான் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.அதற்கான தேவையான நடவடிக்கைகளை நிர்வாகிகள் மேற்கொண்டு அனுமதியை பெற்று கொடுத்து 23.06.2020 அன்று அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தனர்.
சென்னை வந்தடைந்த ஊழியர்கள் SDPI கட்சிக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது அவர்கள் யாவரும் சென்னையில் கொரண்டைனில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.