பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகம் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மர்சூக் அஹ்மத் வரவேற்புரை ஆற்றினார். சமூக ஆர்வலர் ஜியாவுதீன் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாஜக அரசு மற்றும் அமலாக்கத் துறையை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.