Saturday, April 27, 2024

அதிரையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு !(முழு விவரம்)

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தில் ரேஷன் கடை ஊழியர் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பட்டுக்கோட்டை DSP புகழேந்தி கணேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் வீடு புகுந்து இளைஞர்களை கைது செய்து சென்றுள்ளனர்.

காவல்துறையின் நள்ளிரவு அத்துமீறலை கண்டித்து இன்று மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிரை அனைத்து முஹல்லா, அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ADSP ஜெயச்சந்திரன், DSP சபியுல்லாஹ், ஆய்வாளர் ஜெயமோகன் ஆகியோர் அதிரை அனைத்துமுஹல்லா செயலாளர் PMK. தாஜுதீன், தமுமுக மாநில துணை செயலாளர் அதிரை அஹமது ஹாஜா, மஜக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், அன்வர் அலி, புகாரி, அரசியல் மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நேற்று இரவு நடைபெற்ற சம்பவத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்று இனி நடக்காது என்றும், ஜமாஅத் அனுமதி இன்றி இரவு நேர கைதுகளோ, தெருவிற்குள் நுழைவதோ இருக்காது என்று உறுதிமொழியும் அளித்துள்ளனர். இதனடிப்படையில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...